காரைதீவில் இளவல்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வு

கல்முனைப்பிராந்தியத்துக்குட்பட்ட காரைதீவு சுகாதாரப்பிரிவில் கடந்த இரண்டுதினங்களாக இளவல்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

30வயது இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட பலர் இத்தடுப்பூசியைப்பெற ஆர்வம்காட்டினர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டாக்டர்.தஸ்ஸீமா வசீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ,பொது சுகாதார பரிசோதகர்கள்,குடும்ப நல உத்தியோகத்தர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பிரதேச சபைநுளம்பு கள தடுப்பு பிரிவினர், நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர்பாதுகாப்பு படையினர் இணைந்துகொண்டனர்.

கொவிட்-19 தடுப்பூசி இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் 04 நிலையங்களில் நடைபெற்றது.30-60 வயதானவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது…

Related posts