காரைதீவு பிரதேச செயலாளருக்கு கொரோனா!

காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெக ராஜனுக்கு நேற்று(20) கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக அவருக்கு இருந்த காய்ச்சல் காரணமாக நேற்று அவருக்கு அன்ரிஜன் பரிசோதனை செய்யப்பட்டது.
 அத்துடன் பிரதேச செயலகத்தில் இருக்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்பட்டது.
 அதன்போது பிரதேச செயலாளருக்கும் மற்றும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் .
நேற்று முன்தினம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளருக்கும் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தமை தெரிந்ததே.

Related posts