காலக்கோடுகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் 

ஈழத்து நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து  பல நாடுகளில் வாழ்ந்து வரும் ஈழத்து கவிஞர்கள் தங்களது இனத்தின் அடையாளங்களையும் . வரலாறுககளையும் ஆவனப்படுத்துகின்ற செயற்பாடுகளில் இன்று பல ஈழத்து செயற்பாட்டாளர்கள் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் பாடல்கள், கவிதைகள் என தன் எழுத்துக்களால் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் வன்னியூர் குரூஸ் அவர்களது காலக்கோடுகள் எனும் கவிதைத் தொகுப்பு  நேற்று பாரிஸ் நகரில் நடைபெற்றது 

இங்கு நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் கவிதை நூல் வெளியீட்டரங்கு,. தற்போதைய காலகட்டத்தில் முகநூலின் செயற்பாடு ஊடகங்களின் வகிபாகம் பற்றியும் மற்றும்  வாழ்துக்கவிகள் என்பவற்றோடு நடன நிகழ்வுகளும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. 

கவிஞர் பாலகணேசன் அவர்களது தமையில் இடம்பெற்ற வெளியீட்டரங்கில் கவிதைத் தொகுப்பு குறித்தான தமது உரைகளை, சமூக-அரசியல் பிரதிநிதிகளான பரா, இராஜன், யாழ்நிலா, மைக்கல் கொலின்ஸ், சுதன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.

கவிதைத் தொகுப்பினை வன்னியூர் குரூஸ் வெளியிட்டு வைக்க, முதற்பிரதியினை கவிஞர் பாலகணேசன் அவர்கள் பெற்றுக் கொண்டதுடன் தொடர்ந்து ஏற்புரையினை  வன்னியூர் கவிஞர் வழங்கிவைத்தமையும்.

Related posts