கிராமத்திலிருந்து எதிர்கால மருத்துவர்; ஊரே மகிழ்ச்சிக் கொண்டாட்டம்!

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ம் கிராமத்தில் மாவட்ட ரீதியில் 13ம் இடத்தினைப் பெற்று பிரதேசத்தில் வைத்திய துறைக்கு முதல் மாணவனாக முருகமூர்த்தி கிருஷாந் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கல்லோயா குடியேற்ற கிராமங்களை உள்ளடக்கிய நாவிதன்வெளி பிரதேசத்தில் ஒரு ஏ(A)இரண்டு பி(B)சித்திகளையும் பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் முதலாம் தரம் தொடக்கம் கா /பொ/சாதாரண தரம் வரை 15ம் கிராமம் விவேகானந்த மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று புலமை பரிசில் பரீட்சையிலும், சாதாரண தரத்தில் ஒன்பது ஏ(A) சித்திகளை பெற்று துறைநீலாவணை மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியை கற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மருத்துவ துறைக்கு தெரிவானது குறித்து முருகமூர்த்தி கிருஷாந் கருத்து தெரிவிக்கையில் பெற்றோரும், ஆசிரியர்களும், சக தோழர்களும் கொடுத்த ஊக்குவிப்பும் பக்கபலமும்தான் வெற்றிக்கு காரணமென கருத்து தெரிவித்தார்.

Related posts