கிழக்கின் எழுச்சி விவசாய கண்காட்சி

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் உகண தேசிய பாடசாலையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திணைக்களங்களின்       தலைவர்கள் உத்தியோகத்தர்கள் விவசாயிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  மூவின மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் கலை நிகழ்வுகளோடு நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் நடைபெற்ற கண்காட்சியில் மழையின் மத்தியிலும் பெருமளவான பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். விவசாய பயிர்ச்செய்கை முறைகள் புதிய தொழிநுட்பங்கள் என்பன உட்பட ஒவ்வொரு திணைக்களங்களுக்குமான காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts