கிழக்கில் அதிகரிக்கும் புதையல் வேட்டை ; ஐவர் கைது !

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்றிய ஐவரை நேற்றிரவு (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இருவரையும், அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மூவருமாக ஐவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை ஜமாலியா பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய கருவிகள் மற்றும் இரும்பு வகைகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts