கிழக்கில் காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

திருகோணமலை – மூதூர் பகுதியில் பேரூந்தில் பயணித்த காதல் ஜோடியை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூதூர் – புளியடி பகுதியில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், மூதூரில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பேரூந்தில்குறித்த ஆணும் பெண்ணும் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளனர். இதன்போது அடை யாளம் தெரியாத நபர்கள் அவர்களை இலக்கு வைத்து வெளியில் இருந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் பேரூந்தின் கண்ணாடி மட்டும் உடைந்துள்ளதாகவும், பெண்ணுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதமை குறிப்பிடதக்கது.

Related posts