கிழக்கில் கொரோனா தொற்று 629 கல்முனையில்470 : அக்கரைப்பற்று கொத்தணியில் 427.

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது.  கிழக்கில் இதுவரை(15.12.2020)  629 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
அதேவேளை கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 470பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அந்தப்பிராந்தியத்தில் புதிதாக உருவான அக்கரைப்பற்றுக் கொத்தணி மூலமாக இதுவரை 427பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவ் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
 
கல்முனைப்பிராந்தியத்தில் புதிதாக அட்டாளைச்சேனையில் திடீர் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 55பேர் தொற்றிலுள்ளனர்.
இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மற்றும் ஏனைய இடங்கள்மூலமாக  23பேரும் பேலியகொட கொத்தணி மூலமாக 606 பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.
இதுவரை கிழக்கில் பேலியகொட கொத்தணி மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 98பேரும் கல்முனை பிராந்தியத்தில் 470பேரும் திருமலை மாவட்டத்தில் 18பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 20பேரும் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.
 
தனியாகப்பார்க்குமிடத்து  அக்கரைப்பற்றில் மட்டும் 278பேரும் அடுத்ததாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 60 இனங்காணப்பட்டிருந்தன.அடுத்தபடியாக  அட்டாளைச்சேனையில் 55பேரும் கல்முனை தெற்கில் 22 பேரும் ஆலையடிவேம்பில் 18பேரும் சாய்ந்தமருதில் 18பேரும்  இறக்காமத்தில் 15பேரும் ஏறாவூரில் 10பேரும்  இனங்காணப்பட்டிருந்தனர்.
 
சிகிச்சை நிலையங்களில் 1805 அனுமதி
 
கிழக்கிலுள்ள 06 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 526கொரோனாத் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று (15.12.2020) வரை 1805பேர் மேற்படி 6 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 1269பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.10பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.இன்னும் 40கட்டில்கள் எங்சியுள்ளன.
 
காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 638பேர் அனுமதிக்கப்பட்டு 493பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 141பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். நால்வர் இடமாற்றப்பட்டிருந்தனர்.இன்னும் 21கட்டில் தேவையாயுள்ளன.
 
மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 51 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 96 பேரும் பதியத்தலாவ சிகிச்சை  நிலையத்தில்  61பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 81 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 96 பேரும்சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
 
22468பேருக்கு பிசிஆர் பரிசோதனை
இதுவரை கிழக்கில்     22468பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப்பகுதியில் மட்டும் 9940 பிசிஆர் அன்ரிஜன்ற் சோதனை நடாத்தப்பட்டது.
கல்முனைப்பிராந்தியத்தில் 11759 சோதனைகளும் மட்டக்களப்பில் 6897 சோதனைகளும் அம்பாறையில் 2173 சோதனைகளும் திருகோணமலையில் 1639சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
அக்கரைப்பற்று கொத்தணியில் 427.
 
புதிதாக உருவானஅக்கரைப்பற்றுக்கொத்தணியில் இதுவரை 427பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அக்கரைப்பற்று பொதுச்சந்தையிலிருந்து இதுவரை அக்கரைப்பற்றில் 275பேரும் அட்டாளைச்சேனையில் 55பேரும் சாய்ந்தமருதில் 13பேரும் ஆலையடிவேம்பில் 18 திருக்கோவிலில் 12பேரும் இறக்காமம் 9பேரும் கல்முனை வடக்கில் 5பேரும்  தெற்கில் 16பேரும் பொத்துவிலில் 13பேரும் சம்மாந்துறையில் 2பேரும் நாவிதன்வெளி காரைதீவு 7பேரும்  நிந்தவுரில் தலா  2பேருமாக மொத்தம் 427பேர் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையின் மூலமாக இனங்காணப்பட்டுள்ளனர்.

Related posts