கிழக்கு உட்பட இன்றைய இரவு காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனுடன் இன்று இரவு வேளையில் மத்திய, சப்ரகமுவ, தென், மேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பல தடவைகள் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், சப்ரகமுவ, மாகாணத்துடன், காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts