குடும்பஸ்தர் தீயிட்டு தற்கொலை -ஆரையம்பதியில் சம்பவம்

காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட செல்வாநகர் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான 45 வயதுடைய கே.குணசீலன் என்பவர் தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த குடும்பஸ்தர் கடந்த 13ம் திகதி தனது வீட்டில் ஏற்பட்;ட குடும்பத்தகராறு காரணமாக தனது வீட்டில் வைத்து தனக்குத்தானே தீயிட்டு படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (14) உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது
 
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு-மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts