குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை-செங்கலடியில் சம்பவம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை தயக்குமார் வயது (47) என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் நேற்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
தனது வதிவிடமான மகிழூர் பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து தனது மனைவியுடன் ஏற்பட்ட தகறாற்றினால் வீட்டை விட்டு வெளியேறி நிலையில் செங்கலடி பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான்  அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எச்.எம்.ஹக்கீம்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts