குடும்பஸ்தர் தோட்ட வளாகத்திலிருந்து சடலமாக மீட்பு-வவுணதீவில் சம்பவம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பழங்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தோட்ட வளாகத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (11) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கல்லடிப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பிராஜா இராஜகோபால் வயது (62) என்;பவர் பழங்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தோட்;ட வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்து கொண்டு தனது உதவியாளருடன் தோட்டத்தை பராமரித்து வருவதாகவும் சம்ப தினத்தண்டு இரவுச்சாப்பாட்டை உண்டு விட்டு தனியாக நித்திரை செய்த நிலையில் மறுநாள் அவரின் உதவியாளர் சென்று பார்த்த போது மரணமான நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts