குருமண்வெளி சிவசக்தியில் மர நடுகை விழாவும் சிரமதானப்பணியும்

சர்வதேச சுற்றுப்பு சூழல் தினத்தையொட்டி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதானப்பணியும், மர நடுகை விழாவும் முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி அதிபர் கே.பிரபாகரன், உப அதிபர் எம்.தருமரெத்தினம் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பாடசாலை வளாகம் துப்பரவு செய்யப்பட்டதுடன் 30 பயனுள்ள மரக் கன்றுகளும் நாட்டப்பட்டது.
இப்பாடசாலையில் பொலித்தீன் அற்ற பாடசாலை ஆக்கும் செயற்திட்டத்தினை  அதிபர் க.சத்தியமோகன் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இங்கு பசுமையான புற்தரை உருவாக்கப்பட்டு அனைவரதும் பாராட்டைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts