கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பிரதேசத்தில் இனந் தெரியாதேரின் கூரிய ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதுடன் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
 கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்தநபர் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் இருந்துள்ள நிலையில் சுமார் 6.30 மணியளவில் அவருடைய கையடக்க தொலைபேசிக்கு வந்து அழைப்பையடுத்து அவர் அந்த அழைப்புக்கு பதில் அளித்தவாறு வீட்டின் பின்பகுதியான வெற்று காணிப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் சுமார் அரை மணித்தியாலயத்தின் பின்னர் ஒரு சத்தம் கேட்டது அதனையடுத்து அங்கு உறவினர்கள் சென்றபோது தலையில் இரத்தம் வழிந்த நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளதாகவும் அண்மையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற சண்டையின் எதிரொலியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து மட்டு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்ப ட்டுள்ளதுடன் மண்டூரை இருவரை சந்தேகத்தில் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மோப்ப நாய் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts