‘கொக்கைன் பயன்படுத்தும் அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் ஆக்க முடியாது’

கொக்கைன் பயன்படுத்தும் அரசாங்கத்தால் கொக்கைனை இல்லாமல் ஆக்க முடியா​தென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று தங்காலை கால்டன் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொக்கைன் பயன்படுத்துபவர்கள் அமைச்சரவையில் இருப்பார்களானால் அவர்களின் ​பெயர்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து அமைச்சர்கள் அனைவரையும் குற்றஞ்சுமத்த மு​டியாது. ஆனால் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல அமைச்சர்களின் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களே அமைச்சரவையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts