கொரோனா நீங்க சேனைக்குடியிருப்பில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம்

நாட்டிலே கொரேனா ஆபத்து நீங்க சேனைக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட ஹோமமும் பிரார்த்தனை வழிபாடும் நேற்றுஅதிகாலை  இடம்பெற்றது. .
 
பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருநதமை தெரிந்ததே.
 
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின் பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரனின் ஏற்பாட்டில் நேற்று   சேனைக்குடியிருப்பு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. கிரியைகள் யாவும் வித்யாசாகரன் தேசகீா்த்தி சிவ ஸ்ரீ கணேஷ் திவிஷாந்த சிவாச்சாரியார் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து கொண்டதுடன் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஜீவராஜ் ஆலய பிரதம குரு காேணாமலை மற்றும்ஆலய தலைவர் சி.அரசரெட்ணம் உபதலைவர்களான இ.சாந்தருபன் த.பத்மசிறிதேவன் செளாலர்களான செ.துரைராஜா லாே.பி.ரேமகாந் பாெருளாளர்.கே.நந்தீஸ்வரன் வண்ணக்கர் சு.சாேமசுந்தரம் ஆலய நிர்வாகத்தினர் தர்மகர்த்தாக்கள் கிராம உத்தியோகத்தர்கள்பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இந்நிகழ்வானது இலங்கை வானொலி சேவையில் காலை 06.30 மணிக்கு ‘ஆலயதரிசனம்’ என்னும் நிகழ்ச்சியின் ஊடாக நேடியாக ஒலிபரப்பானது.

Related posts