கொள்கலன் பாரவூர்தி குடை சாய்ந்தது

கொள்கலன் பாரவூர்தி ஒன்று யாழ் நோக்கிச் சென்ற வேளை பூநகரி தனங்கிளப்பு பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

இன்று(29) காலை 8 மணியளவில் தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டுச் சென்று குடை சாய்ந்துள்ள நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாரவூர்தியின் டயர் காற்றுப்போனதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

எனினும் இவ்விபத்தில் பாரவூர்தியில் சென்ற சாரதி உட்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts