கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ‘நவோதயா கிருஷ்ணா’ சுட்டுக்கொலை

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாணந்தன், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கொழும்பு-13, செட்டியார்த் தெருவில் இடம்பெற்றுள்ளது.

இவர், மாநகர சபைக்கான தேர்தலில்,சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார்.

இதேவேளை, கொழும்பு, ஜம்பட்டா தெருவில்,  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில், இருவர் கொல்லப்பட்டதோடு, மேலுமிருவர் காயமடைந்தனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் 58 வயதுடைய ஆண் எனவும் மற்றையவர் 50 பெண் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts