கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா

 

கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் கனிஷ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் சந்திரிக்கா செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையில் கல்வி உள்ளிட்ட புறக்கிருத்திய செயற்பாடுகளில் மாணவர்கள் மற்றும் பாடசாலை பெற்ற அடைவுகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாணவர்கள் உளவியல் ரீதியாக உயர்ச்சி பெற்று தேசிய ரீதியில் சாதனையாளர்களாக எழுற்சி பெறவேண்டும் என்ற நோக்கோடு விசேடமாக 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலைச் சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்தமைக்கான பசுமையான சூழல் விருதினையும் சான்றிதழ்களையும் பாடசாலைச் சமூகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன்ஈ ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

Related posts