கோர விபத்தில் இளைஞன் பலி – ஒருவர் கவலைக்கிடம்

ஏறாவூர், சந்திவெலி பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
திருகோணமலையில் இருந்து அக்கறைபற்று நோக்கி பயணித்த பேருந்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
மேலும் 16 வயதுடைய ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
சந்திவெலி பகுதியை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts