கௌரவ பிரதமர் கதிர்காமம் கிரிவெஹரவில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (2020.12.12) பிற்பகல் ருஹுணு மாகம்பத்துவே பிரதான சங்கநாயக்கர், கதிர்காமம் சாசனாரக்ஷக பல மண்டலயவின் தலைவர், கிரிவெஹர ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த தேரரை சந்;தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
 
கிரிவெஹர தாதுகோபுரத்தின் முன்னால் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட கௌரவ பிரதமரை, வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசிர்வதித்தனர்.
 
போதி மர வழிபாட்டில் ஈடுபட்ட கௌரவ பிரதமர், ருஹுணு கதிர்காம மகா தேவாலயம் மற்றும் பரிவார ஆலயங்களை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
 
அங்கு வருகைத் தந்திருந்த பக்தர்களிடம் நலன் விசாரித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
 
தொடர்ந்து, கதிர்காமம் அபிநவாராமயவிற்கு சென்ற கௌரவ பிரதமர், அபிநவாராமாதிபதி ருஹுணு மாகம்பத்துவே பிரதான நீதித்துறை சங்கநாயக்கர் கபுகம சரணதிஸ்ஸ தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.
 
குறித்த வழிபாட்டு நிகழ்வில் தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ச கோதாகொட, கதிர்காமம் பிரதேச சபையின் தலைவர் சானக அமில ரங்கன, ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்னாஹிர நிலமே டிஷான் குணசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
வீடியோ இணைப்பு 

Related posts