சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்த 131 இலங்கை பிரஜைகள் மலேசியாவில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கிப் பயணித்த 131 இலங்கை பிரஜைகள், மலேசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எட்ரா எனும் படகில், 98 ஆண்களும், 24 பெண்களும், 4 சிறுவர்களும் 5 சிறுமிகளும் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் படகில் இவர்கள் அவுஸ்திரேலியா அல்லது நியூஸிலாந்து நோக்கி பயணித்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் நடவடிக்கை தொடர்பில் 4 இலங்கைப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts