சட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டுப் பரப்பில் சட்டவிரோத கடலட்டை பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களை உள்ளூர் மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி வெளிமாவட்ட மீனவர்கள் வாடிகள் அமைத்து சட்டவிரோதமான வகையில் இரவு வேளைகளில் பாரிய ஒளி பாச்சி, மிகை ஒலி எழுப்பி கடலட்டை பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற போதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் காரணமாக மீனவர்கள் குறைத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த வகையில்  (புதன்கிழமை) இரவு கடலட்டை பிடிப்போரை கட்டைக்காடு மீனவர்கள் சுற்றி வளைத்து 3 படகுகளையும் 8 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்தவர்களை நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts