சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது

திருகோணமலை நயாரு கடல் பகுதியில் செல்லுபடியான அனுமதி பத்திரம் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேரை நேற்று (04) கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கிழக்கு கடற்படை கட்டளை முகாமின் வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது, இந்த 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 
கைது செய்யப்பட்ட சந்தேநபர்கள் திருகோணமலை, குச்சவெலி மற்றும் எரக்கண்டி பிரதேசங்களில் வசிக்கின்ற 20 முதல் 64 வயது வரையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேக நபர்களிடமிருந்து 07 டிங்கி கடகுகள், 07 வெளிப்புற மோட்டார்கள் மற்றும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் 13 மீன்பிடி வலைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 
கைது செய்யப்பட்ட மீனவர்கள் உட்பட கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு உதவி மீன்வளத்துறை பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts