சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகவும் சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள் சமூகம் அளிக்காத காரணத்தினாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற்றது.

பாதுகாப்புக்கு மத்தியில் இன்று நீதிமன்றத்திற்கு சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர்.

மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர்வரும் நவம்பர் 2ஆம் , 10ஆம்,16ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts