சமகாலத்தில் அம்பாறைத்தமிழர்களின் ஒரேதெரிவு கருணாஅம்மான் மட்டுமே!

இன்றைய நிலையில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் ஒரே தெரிவு கருணா அம்மானைத்தவிர வேறு யாரும் இருக்கமுடியாது.கருணா அம்மான் வென்றால் மட்டுமே எமது மக்களின்  நீண்டகால தேவையான கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சாத்தியமாகும்.
 
இவ்வாறு காரைதீவில்  உரையாற்றிய முன்னாள் அம்பாறை மாவட்ட எம்.பி. குணசேகரம் சங்கர் தெரிவித்தார்.
 
காரைதீவில் தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து அ.இ.த.மகாசபையின் தேர்தல் பிரசாரக்கூட்டம் வேட்பாளர் தி.ஞானேந்திரன்(வின்சன்) தலைமையில் காரைதீவின் வடக்கெல்லையில் நடைபெற்றது.
 
அங்கு சங்கர் முன்னாள் எம்.பி மேலும் உரையாற்றுகையில்:
மாவட்டமெங்கும் என்றுமில்லாத ஒரு புரட்சிஅலை வீறுகொண்டு நடைபோடுகின்றது. இளைஞர்கள் எக்கச்செக்கமாக வந்துகுவிகிறார்கள். படித்தவர்கள் புத்திஜீவிகள் அனைவரும் அணிதிரண்டுள்ளனர்.
 
சுதந்திரத்திற்குப்பின் அம்பாறை மாவட்ட தமிழர்களில் எம்.பியாக முதலில் வந்தவர்கள் ஏதோ சிலவற்றைச் செய்தார்கள். ஆனால் இறுதியாக வந்த பியசேன மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் தங்களை வளர்த்தார்களே தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. நாசமாய்ப்போவானுகள் கடந்த நாலரை வருடங்கள் வீணாக காலத்தைக்கழித்துவிட்டு  வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டு இன்று மீண்டும் வருகிறார். என்னமுகத்தோடு அவர் வாக்குக்கேட்டு வருகிறார். என்ன தகுதி உரிமை இருக்கிறது.பெயருக்கு ஒரு விஞ்ஞாபனம். அதில் ஒன்றையாவது நிறைவேற்றமுடிந்ததா? வெளிநாட்டுப்பயணம். நிதிச்சேகரிப்பு அவ்வளவே.
 
தமிழன் தன்மானவுள்ளவன்.விதியற்ற தமிழன் கதியற்றுப்போனான் என்றநிலையை மாற்றியமைத்து புதுவிதி செய்ய கருணாஅம்மான் அம்பாறை வந்துள்ளார். 
 
அவரது வருகை அம்பாறையில் பாரிய புரட்சியை மாற்றத்தை உண்டுபண்ணிவருகிறது என்பது மட்டும் உண்மையாகும். எதிரணியினர் குறிப்பாக த.தே.கூட்டமைப்பினர் முஸ்லிம் தலைவர்கள்  செய்வதறியாது திணறுகின்றனர்.
 
தமிழ்மக்கள் தன்மானத்தை இழக்காது அரசியல்தீர்வுடன் அபிவிருத்திப்பாதையில் பயணிப்பதே எமது இலட்சியமாகும். தீர்வு தீhவு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம். ஒவ்வொரு 5வருடங்களுக்கும் வந்துபோகும் வேட்டிகளை இன்னும் நம்பினால் நாம் நடுக்கடலில் தத்தளிக்கவேண்டிவரும்.
 
அம்பாறை மாவட்டத்தில் இரவுவேளையில் உயரத்திலிருந்துபார்த்தால் எங்கெல்லாம் இருட்டாக இருக்கிறதோ அவையெல்லாம் தமிழ்ப்பிரதேசங்கள் என்று அடித்துக்கூறலாம். இதுதான் த.தே.கூட்டமைப்பு இதுவரைகாலமும் செய்தசேவை.தமிழமக்களை விற்றுப்பிழைக்கும் கூட்டம் அது. மக்களை குட்டிச்சுவராக்கிவிட்டு தாங்கள் மட்டும் ராஜபோகம் அனுபவிக்கின்றனர்.
 
எந்தவொரு எம்.பி. வியாபாரம் செய்கிறானோ அவன் மக்களுக்கு சேவை செய்யமாட்டான். ஏனெனில் அவனுக்கு வியாபார கணக்குவழக்கு லாபநட்டம் பார்க்கவே நேரம் போதுமானது.கடைசியாகவந்த எம்.பி. கோடீஸ்வரனும் அந்தபாணியில்தான். இங்கு செங்காமம் கிழங்குச்சேனை பொட்டுக்கல் கனகர்கிராமம் போன்ற பறிபோன கிராமங்களுக்கெல்லாம் நானும் கூடவே அவருடன் சென்றிருக்கிறேன். போன இடமெல்லாம் அதை மீட்டுத்தருவேன் என்று சொன்னாரே தவிர இதுவரை ஒரு அங்குலத்தையும் மீட்கவில்லை.ஆனால் அவர் கோடிகோடியாக சம்பாதித்து மீட்டுள்ளார்.
 
இன்று அம்பாறை மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு  ஒற்றுமையாக இல்லாமல் சின்னாபின்னமாக சிதறுண்டு மக்கள் ஆதரவற்று இருப்பதற்குக் காரணம் கோடீஸ்வரன்தான். சகவேட்பாளர் ஒருவருடனும் தொடர்பு இல்லை. தமிழ்மக்களை அடமானமாகவைத்து அரசுக்கு முட்டுக்கொடுத்ததற்காக அரசாங்கம் லஞ்சமாக வழங்கிய  கம்பெரலியைவைத்தவிர செய்தது ஒன்றுமேயில்லை. 
 
இந்தலட்சணத்தில் எந்தமுகத்தோடு மீண்டும் வோட்டுக்கேட்டுவருகிறார். மக்கள் மணற்சேனையிலும் கோளாவிலிலும் விரட்டியடித்தாக கூறப்படுகிறது.
கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் மாவையும் கொடுத்து கடந்தமுறை செய்ததுபோன்று வாக்கெடுக்கலாம் என்று கனவுகாண்கிறார். இம்முறை அந்தப்பாச்சா பலிக்காது.
 
 மக்களை ஒருதடவைதான் எமாற்றலாம். இனி ஏமாறப்போவது அவரே.எனவே இனியாவது நாம் சிந்தித்து எமது இருப்பை பாதுகாக்க தானைத்தளபதியாக கடவுள் கொண்டிறக்கிய கருணா அம்மானை ஆதரிக்க கப்பல் சின்னத்திற்கு வாக்களிப்போம்

Related posts