சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த நிவாரண கொடுபுபணவு வழங்கும் நிகழ்வு 

ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் இன்று உதவி பிரதேiச செயலாளர் எம்.எஸ்.எம்.அல் அமீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.எ.அஸீஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் இனைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாஸர்,பி.எம்.காசிம் அவர்களும் கலந்து கொண்டனர். மற்றும் அதன் அடுத்த நிகழ்வாக இப் பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட
மாஞ்சோலை 207A சமுர்த்தி  பயனாளிகளுக்கு அதிகரித்த சமுர்த்தி கொடுபுப்பணவு இன்று வழங்கி வைக்கப்பட்டது. சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக  கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எம்.நௌபர் கலந்து கொண்டதுடன்  பொருளாதார அபிவிருத்தித் உத்தியோகத்தர் பி.எம்.நூறுதீன்,சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் எம்.என்.எம்.சாஜஹான் அவர்களும் கலந்து கொண்டனர்.
 
 

Related posts