சற்றுமுன் மீண்டும் குண்டுவெடிப்பு; கொழும்பில் தொடரும் பதற்றம்!

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள வரவேற்பு மண்டபம் ஒன்றில் மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவ்விடத்தில் கடும் பதற்றம் நிலவிவருகிறது.

Related posts