சித்தர்களின் குரல் அமைப்பின் போசகர் சிவசங்கர்ஜீ அவர்களது அணுசரணையில் கலைமகள் மகாவித்தியாலயத்தில் செயலமர்வு

வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் வெற்றித்தளம் எனும் விஷேட செயற்றிட்டத்தின் ஒருபகுதியான நிபுணத்துவச் செயலமர்வு சித்தர்களின் குரல் அமைப்பின் போசகர் சிவசங்கர்ஜீ அவர்களது அணுசரணையில் இவ்வருடம் கா.பொ.த சாதாரணதரப்  பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குக் கணிதப்பாடத்தின் அடைவினை அதிகரிக்கும் நோக்கில் கணிதப்பாட செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபர் க.தியாகராஜா தலைமையில் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 

பாடசாலை முகாமைத்துவக் குழுவின்  ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற இச்செயலமர்வில் வேப்பையடிகலைமகள் மகாவித்தியாலயம், வேப்பையடித்தோட்டம் வாணி மகாவித்தியாலயம், 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

இச்செயலமர்வுக்கு  வளவாளராக  ஓய்வுபெற்ற கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எம்.சிறாஜூதீன் கலந்து கொண்டதுடன் 

ஆரம்ப நிகழ்வில் விவேகானந்தா மகாவித்தியாலயத்தின் அதிபர் கே.ஜெகதீசன் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் கு.மதிவண்ணன் ஆசிரியர்களான சா.நடனசபேசன் நிமலராஜன் வ.குலேந்திரன் கிரிதாஸ்,த.சிவநேசன் ஆகியோர் கலந்துசிறப்பிதனர்.இச்செயலமர்வினை நடாத்துவதற்கான உதவியினைச் செய்த சித்தர்களின் குரல் அமைப்பின் போசகர் சிவசங்கர்ஜீ அவர்களுக்கு அப்பிரதேச பெற்றோர்கள் நன்றிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts