சிறிலங்காவில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – தப்பித்தது யாழ்ப்பாணம்

இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளதால் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அத்தோடு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார், புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, புத்தளம், குருணாகலை, மாத்தளை, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts