சிற்றூழியர்கள் நியமனத்தில் ஜனாதிபதி தவறிழைத்துள்ளார் – சிறினேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது சிற்றூழியர்கள் நியமனத்தில் தவறிழைத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறினேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சராக இருந்தபோது பொலனறுவையிலிருந்து அனேகமான சிற்றூழியர்களை மட்டக்களப்பில் நியமித்துள்ளார். சிற்றூழியர்களுக்குரிய வேலைகளை செய்யக்கூடியவர்கள் மட்டக்களப்பில் இல்லையா என எண்ணத்தோன்றுகிறது.

இந்த மாவட்டத்திலிருந்து நிரப்பவேண்டிய வெற்றிடங்களை ஏனைய மாவட்டத்திலிருந்து நிரப்புவதை நிறுத்தி, மட்டக்களப்பில் உள்ளவர்களைக்கொண்டு அதன் வெற்றிங்களை நிரப்ப வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts