சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர் மரணம்.

திருகோணமலை  மட்டக்களப்பு பிரதான வீதியில் சந்தியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது மதிக்கத்தக்க நபர் மரணம். 

 
 
திருகோணமலை பச்சிலை  சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரே ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.
 
 
மூதுரை சேர்ந்த 65 வயதுடைய சித்திக் என்ற நபரை முந்திசெல்ல முயன்ற சீமெந்து லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு பலியாகியாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் .
 
சம்பவம் இடம்பெற்ற பச்சிலைசந்திக்கு விரைந்த மூதூர் பொலிஸார் லொறியின் சாரதியை கைதுசெய்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts