சுதந்திர தினத்தை முன்னிட்டு மருதமுனையில் இரத்ததான நிகழ்வு

 
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நாளை 02 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மருதமுனை மசூர் மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஐந்தாவது ஆண்டாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இரத்ததான முகாம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரந்த வங்கிப் பிரிவோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளைத் தலைவர் எம்.எச்.ஏ.அஜிமிர் தெரிவித்தார்.

அடுத்தவருடைய உயிரை பாதுகாப்பதற்கு தனது இரத்தத்தை நன்கொடையாக வழங்குவது எல்லா நன்கொடைகளிலும் மிகச்சிறந்த நன்கொடையாகும். இனம், மதம், மொழி வேறு பாடுகளை கடந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இந்தப்பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதற்கு ஒத்துளைப்பு வழங்கி வருகின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

இந்த இரத்த தான முகாமில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்தம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9.00 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரைக்கும் இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.

Related posts