சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் கண்பார்வை இழந்தவரின் வாழ்வாதரத்திற்காக கடைத் தொகுதி திறந்துவைப்பு.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின்  ஏற்பாட்டில் பட்டாசு தவறுதலாக வெடித்ததில் கண்பார்வையினை இழந்த நபர் ஒருவரது வாழ்வாதாரத்திற்காக அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதற்கான கடைத்தொகுதினை போரதீவுப் பிரதேசத்தில் திறந்துவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை 2 ஆம் திகதி சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. 

போரதீவு பிரதேசத்தில் வசிக்கும் உதேஸ்குமார் அவர்கள் சுவிஸ் உதயம் அமைப்பிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க  இவரது வாழ்வாதரத்திற்காக ஒருஇலட்சம் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள்  அவருங்கு வழங்கி வைக்கப்பட்டன.

 இவ் உதவிக்கான நிதியினை  யாழ்பாணத்தினைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வாழும் சமூகசேவகர் நாகராசா  விஜயகுமார் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.

 இதற்கான ஒழுங்குகளை சுவிஸ் நாட்டில் வாழும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன்இ செயலாளர் அம்பலவாணர் ராஜன் இபொருளாளர் க.துரைநாயகம் இஉதவிச் செயலாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்கள் அனைவரினது முயற்சியினால் இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர்  மு.விமலநாதன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் அமைப்பின் அங்கத்தவர்களான  ஆசிரியர். சா.நடனசபேசன், ஆசிரியர் இ.ஜீவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இவ் உதவிகளை வழங்கிய சமூகசேவகர் நாகராசா விஜயகுமார் குடும்பத்தினருக்கும், சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாகத்தினர் மறும் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளை நிருவாகத்தினருக்கும் உதஸ்குமார் நன்றியினைத் தெரிவித்துள்ளார்

 

Related posts