சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் உதவித்திட்டம் முன்னெடுப்பு


எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை 05 ஆம் திகதி சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடு, குமாரபுரம் மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கோழிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் உதவியினை சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிப்பொருளாளர் பேரின்பராஜா மற்றும் சுவிஸ் நாட்டில் வசிக்கும் பீற்றர் ஆகியோரின் நிதி உதவி மூலம்; இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது.
இவ் உதவியினை வழங்கிய பிரதிப்பொருளாளர் பேரின்பராஜா மற்றும் சுவிஸ் நாட்டில் வசிக்கும் பீற்றர் அதேவேளை சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல். சுதர்சன் செயலாளர் அம்பலவாணர் ராஜன், அமைப்பின் பொருளாளர் தொழிலதிபர் க.துரைநாயகம் ஆகியோருக்கும் சுவிஸ்உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் உதவியினைப் பெற்றுக்கொண்டோர் நன்றிகளைத் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் அமைப்பின் கிழக்குக்கிளையின் உறுப்பினர் ரொமிலா செங்கமலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts