செல்பி எடுக்க முயன்று பலியானவர்களின் சடலங்கள் கண்டுபிடிப்பு

செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயன்று, பண்டாரவல – பம்பரகம நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நீர்வீழ்ச்சிக்கு குழுவாக வருகைதந்திருந்த வேளையில்,  இளைஞர்கள் மூவர் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு முயற்சி செய்த வேளையில், அதில் இருவர் கால் வழுக்கி கீழே விழுந்துள்ள நிலையில், அவர்களது சடலங்கள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் 20 மற்றும் 21 வயது​களையுடையவர்களென்றும், கெப்பட்டிபொல – திவுரும்வல மற்றும் ஹீல்ஓயா – உடஅராவ பகுதியை சேர்ந்தவர்களென்றும் மேலும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

Related posts