சௌந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “மாபெரும் இரத்ததான முகாம்” இடம்பெறவுள்ளது

(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் அமரர் ஆசுலி  நிமலன் சௌந்தரநாயகம்
அவர்களின் 21ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  “மாபெரும் இரத்ததான முகாம்” இடம்பெறவுள்ளது.

முறக்கொட்டாஞ்சேனை கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில்எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(07.11.2021)காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.”உதிரம் கொடுத்து உயிர்காக்கும் உன்னத பணியில் அனைவரும்  இணைந்து உதிரம்கொடுத்து அன்னாரின் நல்லபணியை நினைவூட்டி ஒற்றுமையுடன்  தமிழ்மக்களுக்கு சேவை செய்வோம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் இரத்தானம் இடம்பெறவுள்ளது.

Related posts