சேனா புழுவின் தாக்கத்தால் 1,185 ஏக்கர் பயிர்ச் செய்கை அழிவு

மட்டக்களப்பில் பயிரிடப்பட்ட சோளமானது, 1,185 ஏக்கர் வரையில் சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை சோளம் பயிர்ச் செய்கையானது 2,240 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் சேனா புழுவின் தாக்கத்தால் 1,185 ஏக்கர் அ​ழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சோளம்  உப உணவு பொருளாகப் பயிரிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts