சேனைக்குடியிருப்பு கணேசமகாவித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலகக் கண்காட்சி.

 

(சா.நடனசபேசன்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேசமகாவித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நூலகக் கண்காட்சி அதிபர் ரி.பூவேந்திரன் தலைமையில்  29 ஆம் திகதி நடைபெற்றது.

நூலக கண்காட்சி  மூன்று தினங்கள் இடம்பெற்றது இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவப் பீடாதிபதி எஸ்.குணபாலன்  சிறப்பு அதிதியாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எம்.எச்.தௌபீக் மற்றும் கௌரவ அதிதிகளாக தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உதவி நூலகர்  எம்.சி.எம்.அஸ்வர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி ஆர்.திரவியராசா கல்முனை மாநகரசபை உறுப்பினர் கே.செல்வராசா கல்முனை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

Related posts