சொட்கன் துப்பாக்கி மீட்பு!

பொலிஸாரின் விசேட தேடுதலின் போது சொட்கன் துப்பாக்கி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை விசேட நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உரப்பை ஒன்றில் இடப்பட்டு சாய்ந்தமருது அல்ஹிலால் வீதியில் இருந்து மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி இயங்கு நிலையில் காணப்படுவதுடன் ஏதேனும் குற்றச்செயல் ஒன்றிற்காக இவ்விடத்திற்கு எடுத்து செல்லப்பட்டனவா என்கின்ற விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தற்போது துப்பாக்கி மீட்கப்பட்ட பிரதேசம் இராணுவத்தின் விசேட பிரிவினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

Related posts