சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் “சேதன பசளை உற்பத்தி” திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!!

அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தின் “சேதன பசளை உற்பத்தி”  திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் செய்முறை பயிற்சியும் இன்று ஏறாவூர் நகர் நகரசபையின்  தவிசாளர் எம்.எஸ் நாளீம் அவர்களின்  தலைமையில் ஏறாவூர் நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ பிரிவில்
இடம் பெற்றது.
 
இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான நசீர் அஹமட் கலந்து சிறப்பித்ததோடு  நகர சபை உறுப்பினர் ஜே.நிசார், நகரசபையின் செயலாளர் ஆர்.சியாஹுல் ஹக், விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன்
மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts