ஜனாதிபதிஅவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்.ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கூடுதல் நிதி உதவிகள் வழங்குவதற்கு உறுதிமொழி.
 
 

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களுடனான விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை(12)காலை 10.00 மணியளவில் அதிமேதகு  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ அவர்களை அவர்களது அழைப்பின் பெயரில் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடி இருந்தோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திகுழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி, மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள்,எதிர்கால மாகாணசபை தேர்தல் போன்ற பல முக்கியமான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.இதன்போது விரைவில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் உறுதிமொழி அளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இனிவரும் காலங்களில் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், நேரடியாக கலந்துரையாடி மட்டக்களப்பு மாவட்டத்தின்  குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் தீர்த்து கொள்ள இருப்பதாகவும், இச்சந்தர்ப்பத்தில் முடிவுகள் எட்டப்பட்டது. இச்சந்திப்பு மிகவும் சுமுகமான முறையில் இடம்பெற்றது எனத்தெரிவித்தார்.

Related posts