ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் நீதிமன்றிடம் கோரிக்கை

பாராளுமன்றை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குண்டு ; அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்க – நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரிக்கை.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம், அரசியலமைப்புக்குட்பட்டதெனத் தெரிவித்துள்ள சட்டமா அதிபர் அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் இரத்துச் செய்யுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தின் படியே பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

அரசியலமைப்பின் 19 வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது எனவும் சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானதல்ல என்றும் பாராளுமன்றம் கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச்செய்யுமாறு சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts