ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தைத் தாண்டியது

நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு 12,845 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மாலை 5 மணிக்கு நிறைவுபெற்றது.

அமைதியான முறையில் இன்றைய வாக்களிப்பு நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 வீதத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தலில் வாக்களிப்பதற்கு 1,59,92,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

கொழும்பு – 75 %,கம்பஹா – 82%,களுத்துறை 75%,கண்டி – 80%,மாத்தளை – 75%,நுவரெலியா – 80 %காலி – 80 %,மாத்தறை – 80 %,ஹம்பாந்தோட்டை – 80 %,யாழ்ப்பாணம் – 66.5%,கிளிநொச்சி – 73 %,வவுனியா – 75 %,முல்லைத்தீவு – 76.2%,மன்னார் – 71%,மட்டக்களப்பு – 75%,திருகோணமலை – 83%,திகாமடுல்ல- 80 %,குருநாகல் – 80%,புத்தளம் – 75 %,அனுராதபுரம் – 75%,பொலன்னறுவை – 80 %,பதுளை – 80%,மொனராகலை – 80%,இரத்தினபுரி – 84%,கேகாலை – 75%

Related posts