’ஜனாதிபதியுடன் எனக்கு பிரச்சினையில்லை’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், தனக்கு எந்தவொருப் பிர​ச்சினையும் இல்லையென்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

ஜனாதிபதியால், உயர்க்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜேதாச ராஜபக்ஷ, தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி தொடர்பில், சபாநாயகரும் ஜனாதிபதியும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க வேண்டுமெனக் கோரினார்.

இதற்கு மேற்கண்டவாறு தெரிவித்த சபாநாயகர், “ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில், எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்குரிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க நான் தயார்” என்றார்.

Related posts