ஜனாதிபதி மைத்திரிக்கு சந்திரிக்கா கடிதம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் தன்னை சந்தித்து நாட்டைப் போலவே கட்சிக்குள்ளும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் தாம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின்  ​பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் குழுவினருடன் ஸ்ரீ.ல.சு கட்சி  இணைவதை  தான்  ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தன்னை வந்து சந்தித்த உறுப்பினர்களிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை விட்டு வேறெந்த கட்சியுடனும் இணையாமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைப் பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்ததாகத் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts