ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் ஒளிவிழா – 2021

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் சிரேஷ்ட
பிரஜைகள் சங்கம் நடாத்திய 2021 ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வு ஜெயத்திபுரம் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.  
 
ஜெயத்திபுரம் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் தோமஸ்கந்தையா தலைமையில்
நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களுக்குரிய
ஒருங்கிணைப்புக் குழு பிரதித் தலைவரும் பொதுஜன பெரமுன
கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமாகிய பரமசிவம் சந்திரகுமார் கலந்து சிறப்பித்ததுடன், சிறப்பு அதிதிகளாக
கல்வி அமைச்சின் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன்,  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி. நவருபரஞ்சினி முகுந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
 
இதன்போது அதிதிகள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து அதிதிகளினால் சிரேஸ்ட பிரஜைகள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு கொளரவிக்கப்பட்டதுடன், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிதிகளின் விசேட உரைகளுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts