‘டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகவும்’

நிலவும் சீரற்ற வானிலையின் காரணமாக டெங்கு நோய்த் தொற்று அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டுமென்றும் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், இவ்வருடம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் ப​டி டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 49,132 ஆகுமென்றும், ​அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதம் 7,278 பேர் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு, இம்மாதம் 3,127 டெங்கு நோயளர்களும் பதிவாகியுள்ளதோடு, வடக்கில் நிலவும் மோசமான வானிலையால் டெங்கு நோய் அபாயம் குறித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகள் 1,500 பேரை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts