இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை

இணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக்கொள்கை இதற்கு மாற்று கருத்து இல்லை இந்த கொள்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக பயணிக்கின்றது. மாகாண சபை தேர்தல் சம்மந்தமான அறிவிப்புக்கள் வெளியாகியதை தொடர்ந்து தமிழ் கட்சிகளின் இணைவு தொடர்பாக பல கருத்துக்கள் பல்வேறு தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் தமிழர்களின் வாக்குகள் பிரிவதை ஏற்றுக்கொள்ள முடியாது அதே நேரம் எந்த கொள்கைக்காக இத்தனை தியாகங்களை எம்மவர்கள் செய்தார்களோ அந்த கொள்கைக்கு மாறாகவோ இக்கொள்கைக்கு மாறானவர்களுடனோ கைகோர்க்க முடியாது ஆனால் இணைந்த வடகிக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுடனும் இணைந்து செயற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

கிழக்கு தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவருவது தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ்த் தேரியக்கூட்டமைப்பு இணைந்த வடக்கு கிழக்கு சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் இணநை்து செயற்படவேண்டும் என்பது எனது கருத்து. தமிழ் மக்களின் அரசியல் பலத்தின் தேவை அவசியம் கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தூரநோக்கு சிந்தனையுடன் கடந்த 2001 ல் தமிழீழ விடுதலைப்புலிகளின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு முதலாவது தேர்தல் 2002 ல் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுத்தது அதன்பின் இரண்டாவது பொதுத்தேர்தல் 2004,ல் ஆனந்த சங்கரி உதயசூரியன் சின்னத்தை வழங்க மறுத்ததை தொடர்ந்து அன்று இருந்து இன்றுவரை இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச்சின்னத்தின் கீழ்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூன்று பொதுத்தேர்தல்கள் இரண்டு மாகாணசபை தேர்தல்கள் பல உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வடகிழக்கு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அரசியல் தலைமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பு செயல்படுகிறது அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் சொந்தமானது எனவே அனைவரும் தமிழர் நலன் கருதியும் எம் மக்களின் இழப்புக்கள் தியாகங்களை மதித்து ஒன்றிணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
தமிழ்த் தேசியத்தை சிதைப்பவர்களுக்கும் இணைந்த வடக்கு கிழக்கை பிரிப்பவர்களுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்காது வடக்கு கிழக்கில் உள்ள இணைந்த வடக்கு கிழக்கு கொள்கையில் உறுதியாகவுள்ள தமிழ் கட்சிகள் இணைந்து செயற்பட வருமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் வரவேற்கும்.

கிழக்குமாகாணசபை தேர்தலில் சிலர் ஒரு பொதுச்சின்னத்தில் அனைத்து தமிழ்கட்சிகளையும் இணைத்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.தமிழ்தேசியகூட்டமைப்பு வடகிழக்கில் தொடர்ந்தும் அனைத்து தேர்தல்களிலும் முகம்கொடுத்து வடகிழக்கு மக்கள் தமிழ்தேசியகொள்கையில் உறுதியாக இருப்பதற்கான செய்தியையும் அதன் தலைமை தமிழ்தேசியகூட்டமைப்பு என்பதையும் நிருபித்துள்ளனர்.

வடமாகாணத்தில் ஒருசின்னத்திலும் கிழக்குமகாணத்தில் வேறொரு சின்னத்திலும் தமிழ்தேசியகூட்டமைப்பு மகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவது இரண்டுவிதமான கருத்துக்களை வெளிக்காட்டுவதாக அமையக்கூடும் என்னை பொறுத்தவரை அப்படி கிழக்குமகாணத்தில் தமிழ்கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திப்பதற்கு இணங்கினால் கொள்கையின் அடிப்படையில் தமிழ்தேசியகூட்டமைப்பு சின்னமான இலங்கைதமிழரசு கட்சி வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுவதே நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்து.
அடுத்தது தமிழ்தேசிய கொள்கைக்கு மாறான சிங்கள பெரும்பான்மை தேசிய கட்சிகளில் அங்கம்வகிக்கும் அமைப்பாளர்களாக செயல்படும் கிழக்கு மகாணத்தை சேர்ந்த தமிழர்கள் மற்றும் கிழக்கு மகாணத்தை மட்டுப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் ஒருகுடையில் வருவதற்கு இணங்குவார்களா என்பது சந்தேகமே.
இன்னுமொன்று கிழக்குமகாணாத்தில் பல கட்சிகள் ஒரு பொதுவானசின்னத்தில் கேட்டு வெற்றியீட்டியபின் பேரினவாதகட்சிகளுக்கு சோரம்போகமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இப்படி பல விடயங்களை சிந்திக்கவேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் கடந்தகால புள்ளிவிபரங்களை நோக்குகையில் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது தமிழர்களின்  தொகை அதிகரிக்க வேண்டுமானால் தமிழர்களின் பிறப்பு வீதம் அதிகரிக்கப்படவேண்டும்.அபிவிருத்தி, நிலபாதுகாப்பு, கலாசார விழுமியங்களை பேணல் என்பவற்றுக்கும் அந்த இனப்பரம்பல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பவை கட்டாயம் தேவை.
தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கப்படவேண்டும் வாக்களிப்பு வீதம் ஏனைய இனங்களைவிடவும் குறைவதாலும், எமது வாக்குகள் சிதறடிக்கப்படுவதாலும் பெரும்பான்மை கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளாளும் எமது இன விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய ஆசனங்கள் மாற்றுத்தரப்புக்கு செல்கிறது.
கிழக்கு மகாணத்தில் தமிழர்கள் வாக்களிக்கும் வீதத்தையும் கூட்டவேண்டும் வாக்குகள் சிதறப்படாமல் இருக்கவும் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாகவுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டியது அவசியமாகும் என்றார்.

Related posts