தந்தை மற்றும் இரு மகள்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ; 4 வயது மகள் உயிரிழப்பு !

கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிற்றூந்து மற்றும் உந்துருளி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உந்துருளியில் பயணித்த தந்தை மற்றும் இரு மகள்கள் காயமடைந்து சாவக்கச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து 4 வயதுடைய மகள் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து சிற்றூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts